தேனி: தேனி மாவட்டம், வருசநாடு வனப்பகுதியில் 2007ல் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நொண்டி மகாலிங்கம் உள்பட 5 மாவோயிஸ்ட்களை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களில் 2009ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் கச்சார் மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் மதன் (34) என்பவர் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் 2011ம் ஆண்டு முதல் தலைமறைவானார். இவரை கியூ பிராஞ்ச் போலீசார் தேடி வந்தனர்.