கூடலூர்: பெரியாறு அணை குறித்து கேரளாவில் தொடர்ந்து செய்யப்படும் பொய் பிரசாரங்களை கண்டித்து, ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தின் சார்பாக கேரள எல்லையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ‘‘பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும், கேரளாவில் பெரியாறு அணை தொடர்பாக விஷம கருத்துக்களை பரப்பி வரும் ரசூல் ஜோயை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், பெரியாறு அணை குறித்து பொய் பிரசாரத்தை மேற்கொண்டு வரும் கேரளா பிரிகேட் என்ற அமைப்பை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் நேற்று தமிழக - கேரள எல்லை லோயர்கேம்ப் மணிமண்டபம் அருகே முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.