சண்டிகர்: பஞ்சாப்பில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. அதை சந்திப்பதற்காக பாஜ முழுவீச்சில் தயாராகி வருகிறது. அதன் முதல் கட்டமாக, எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களை இழுத்து, அக்கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது. ஏற்கனவே, காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், புதிய கட்சி தொடங்கி பாஜ.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இந்த வலையில், தற்போது இம்மாநில ஆம் ஆத்மி கட்சி எம்பி.யையும் சிக்க வைக்க, ஆசை காட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவராக இருப்பவர் பகவந்த் மான். சங்ரூர் தொகுதி எம்பி.யாகவும் இருக்கிறார்.