ஐதராபாத்: தியேட்டர் டிக்கெட் கட்டண விவகாரம் தொடர்பாக தெலங்கானா மாநில அமைச்சருடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு நடத்தினர். ஆந்திரா, தெலங்கானா என மாநிலங்கள் பிரிந்த பிறகு, இரு மாநில வியாபாரத்தை தெலுங்கு சினிமா நம்பியுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் ஆந்திராவில் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டது. அத்துடன் தியேட்டர்களில் பகல் காட்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் கூறிவந்தனர்.