ஒடுகத்தூர்: வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை, நாயக்கனூர், பாலம்பட்டு, சின்னூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக தினமும் கே.ஜி. ஏரியூர் அருகே உள்ள வி.கே.தாமோதர நகர் வழியாக ஒடுகத்தூருக்கு சென்று வருகின்றனர். இதற்காக, அப்பகுதியில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன் தார்சாலை அமைக்கப்பட்டது. தொடர் மழையால் வி.கே. தாமோதர நகர் பகுதி தார் சாலையில் நேற்று திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது.