டெல்லி: நாடாளுமன்றக் குழுக்கள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார். குழுக்களின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையையும் கடமைப் பொறுப்பையும் உறுதி செய்ய தொழில்நுட்பம் உதவும் என அவர் கூறியுள்ளார். பொதுக்கணக்கு குழுவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை ஒட்டி நடைபெற்ற விழாவில் ஓம்பிர்லா உரையாற்றினார்.