மழையால் தொடர் மண்சரிவு: ஊட்டி மலை ரயில் 14ம் தேதி வரை ரத்து

ஊட்டி: மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் வழியாக ஊட்டிக்கு தினசரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயில் பாதை கல்லார் முதல் குன்னூர் வரை சுமார் 20 கி.மீ தூரம் மலைப்பாதை வழியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் பெய்த மழை காரணமாக மண் மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததால் ரயில் தண்டவாளம் சேதமடைந்தது. இதை அடுத்து அக்டோபர் 23ம் தேதி முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சீரமைப்பு பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அவ்வப்போது பெய்த மழை காரணமாக ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது.

இதனால் ரயில் போக்குவரத்தை துவங்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் காரணமாக கல்லார் முதலில் ஹில்குரோவ் ரயில் நிலையம் வரை மூன்று இடங்களில் மண்சரிவு மற்றும் பாறை விழுந்து உள்ளதால் ரயில் தண்டவாளங்கள் முற்றிலுமாக சேதடைந்தது. இந்நிலையில் ரயில் பாதை அமைந்துள்ள மலைப்பகுதிகளில் தொடர்ந்து மண்சரிவு ஏற்படும் நிலை உள்ளதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி ஊட்டி மலைரயில் போக்குவரத்து வருகிற 14ம் தேதி வரை ரத்து செய்து சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Stories: