ஆற்காடு: ஆற்காடு அருகே 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி நிரம்பிகோடி போவதை முன்னிட்டு பொதுமக்கள் சிறப்பு பூஜை செய்து கொண்டாடினார்கள். ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்தது. இதனால், 369 ஏரிகளில் 311 க்கும் மேற்பட்ட ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளது. மேலும் பல ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. திமிரி அருகே உள்ள மோசூர் ஏரி 25 ஆண்டுக்குப் பிறகு முழுவதும் நிரம்பி தண்ணீர் கோடி போய் கடை வாசல் வழியாக வெளியேறுகிறது.