ஆலங்குளத்தில் மாற்றுத்திறனாளிகள் தின கண்காட்சி யூனியன்: சேர்மன் துவக்கிவைத்தார்

ஆலங்குளம்: ஆலங்குளம் காமராஜர் சிலை அருகில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அமர்சேவா சங்கம் சார்பில் கண்காட்சி மற்றும் விற்பனை மைய திறப்பு விழா நடந்தது. ஆலங்குளம் ஒன்றிய ஆணையாளர் பழனிவேல் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் (கிராமப்புறம்) ராதா, அமர்சேவா சங்க சமூக பணியாளர்கள் இசக்கித்துரை, அம்பிகா செல்வி, பொன் சுகந்தா முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா, கண்காட்சியைத் திறந்துவைத்தார். மேலும் மாற்றுத்திறனாளிகளால் தயாரிக்கப்பட்ட பினாயில், நூலால் கோர்க்கப்பட்ட கம்மல்கள் மற்றும் பல்வேறு கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் மையத்தை துவக்கிவைத்துப் பேசினார். இதில் கந்தசாமி, பிரியா மற்றும் அமர்சேவா சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: