நெல்லை: அதிமுகவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் கரிவலம்வந்தநல்லூர் பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக குப்பை கொட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் கிராம பஞ்சாயத்து தலைவராக அதிமுகவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மாரியப்பன் இருந்து வருகிறார். கட்சியின் கிளைச் செயலாளர் பதவிக்கு இவர் ஒரு கோஷ்டியாகவும், கதிர்காமன் மகன் பழனிவேல்ராஜன் என்பவர் மற்றொரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதே போல் அண்மையில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒரே கட்சியைச் சேர்ந்த இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிட்ட நிலையில் மாரியப்பன் வெற்றிபெற்று பஞ்சாயத்து தலைவரானார்.