×

கற்பித்தல் என்னும் கலை

நன்றி குங்குமம் தோழி

‘கண்ணீர்’சிந்த வைத்த மாணவன், பார்ப்பதற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், பெரிய இடத்துப் பையன் போலவும்தான் இருந்தான். சந்தர்ப்பங்கள்தான் ஒரு மனிதனை மாற்றுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். சிறு பிள்ளைகளாக இருந்தாலும், மற்றவர் எதிரில் தன்னை பிறர் குறை கூறவோ, யாரும் தன்னை அவமதிக்கவோ அவன் மனம் விரும்பவில்லை. எவ்வளவு பெரியவர்களாகயிருப்பினும், நமக்கு இது முக்கியமான பாடம். இதைத்தான் மாணவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றேன். அதனால்தான் அந்த மாணவனும் தன் நிலைமையை மறைத்திருக்கிறான். அன்றைய நிகழ்ச்சிக்குப் பிறகு அவன் தன் ஆசிரியர்களை நண்பர்களாக்கிக் கொண்டான். தினமும் இடைவேளை சமயங்களில் அவனிடம் தனியாகப் பேசி, அவன் தேவைகளை புரிந்துகொண்டோம். நேரிடையாக பொருட்கள் தராமல், அவன் முன்னேற்றத்தைப் பாராட்டி பரிசளிக்க ஆரம்பித்தோம். அவன் உயர்ந்து வந்ததைக் கண்டு, நாங்கள் பெருமைப்படாத நாட்களேயில்லை.

இதேபோன்றுதான் ஒவ்வொரு மாணவ, மாணவியருக்குள்ளும் சில எண்ணங்கள், ரகசியங்கள், நிகழ்வுகள் குடிகொண்டிருக்கும். முதலில் அவற்றைத் தெரிந்துகொண்டு விட்டால், அதற்கேற்ற ஆலோசனைகள் மூலம், நல்வழிப்படுத்த முடியும். முதலில் நாம் அவர்களைப் புரிந்து நடந்தால், அவர்களுக்கு நம்மிடம் மதிப்பும், மரியாதையும் கூடும். பின் கற்றுத்தருவது என்பது கடினமாகாது. உதாரணத்திற்கு, அவர்களிடம் சென்று ‘வணக்கம்’ மாணவர்களே! என்று நாமே ஆரம்பிக்கலாமே! நாம் ஒன்றும் இழக்கப்போவதில்லை. ஒருசில நாட்களில் அதையே அவர்கள் சொல்ல ஆரம்பிப்பார்கள். ‘கண்ணீர்’ சிந்த வைத்த மாணவன், பார்ப்பதற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், பெரிய இடத்துப் பையன் போலவும்தான் இருந்தான். சந்தர்ப்பங்கள்தான் ஒரு மனிதனை மாற்றுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். சிறு பிள்ளைகளாக இருந்தாலும், மற்றவர் எதிரில் தன்னை பிறர் குறை கூறவோ, யாரும் தன்னை அவமதிக்கவோ அவன் மனம் விரும்பவில்லை.

எவ்வளவு பெரியவர்களாகயிருப்பினும், நமக்கு இது முக்கியமான பாடம். இதைத்தான் மாணவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றேன். அதனால்தான் அந்த மாணவனும் தன் நிலைமையை மறைத்திருக்கிறான். அன்றைய நிகழ்ச்சிக்குப் பிறகு அவன் தன் ஆசிரியர்களை நண்பர்களாக்கிக் கொண்டான். தினமும் இடைவேளை சமயங்களில் அவனிடம் தனியாகப் பேசி, அவன் தேவைகளை புரிந்துகொண்டோம். நேரிடையாக பொருட்கள் தராமல், அவன் முன்னேற்றத்தைப் பாராட்டி பரிசளிக்க ஆரம்பித்தோம். அவன் உயர்ந்து வந்ததைக் கண்டு, நாங்கள் பெருமைப்படாத நாட்களேயில்லை. இதேபோன்றுதான் ஒவ்வொரு மாணவ, மாணவியருக்குள்ளும் சில எண்ணங்கள், ரகசியங்கள், நிகழ்வுகள் குடிகொண்டிருக்கும். முதலில் அவற்றைத் தெரிந்துகொண்டு விட்டால், அதற்கேற்ற ஆலோசனைகள் மூலம், நல்வழிப்படுத்த முடியும். முதலில் நாம் அவர்களைப் புரிந்து நடந்தால், அவர்களுக்கு நம்மிடம் மதிப்பும், மரியாதையும் கூடும். பின் கற்றுத்தருவது என்பது கடினமாகாது. உதாரணத்திற்கு, அவர்களிடம் சென்று ‘வணக்கம்’மாணவர்களே! என்று நாமே ஆரம்பிக்கலாமே! நாம் ஒன்றும் இழக்கப்போவதில்லை. ஒருசில நாட்களில் அதையே அவர்கள் சொல்ல ஆரம்பிப்பார்கள்.

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாஸன்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!