தொண்டர்கள் பிரதாப் சிங், ராஜேஷ் ஆகியோர் தாக்கப்பட்டது வேதனையளிக்கிறது; சசிகலா அறிக்கை

சென்னை: தொண்டர்கள் பிரதாப் சிங், ராஜேஷ் ஆகியோர் தாக்கப்பட்டது வேதனையளிக்கிறது என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். இனி என்னை போன்றவர்களால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. எந்த இயக்கமாக இருந்தாலும் தொண்டர்களை மதிக்க வேண்டும். கொடி பிடிக்கும் தொண்டர்கள்தான் தேவையே ஒழிய தடி எடுக்கும் குண்டர்கள் அல்ல. இன்று தொண்டர்களின் நிலையை எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கண்ணீருடன் பார்த்து கொண்டிருப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: