தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 731 பேர் பாதிப்பு; 6 பேர் பலி; 753 பேர் குணம்: சுகாதாரத்துறை அறிக்கை..!

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 731 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே 800க்கும் கீழ் பாதிப்பு பதிவாகிவருகிறது. அந்த வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 731 பேருக்கு தொற்றுப் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,29,792 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுப் பாதிப்பில் இருந்து இன்று 753 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,85,203 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களில் 8,070 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,519 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டங்களை பொறுத்தவரை சென்னையில் 136 பேருக்கும் கோயம்புத்தூரில் 130 பேருக்கும் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் தொற்றுப் பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: