சாலை விபத்தில் மூச்சு, பேச்சு இன்றி மயங்கிய மாணவன் : இதயத்துடிப்பை மீட்ட செவிலியர்

மன்னார்குடி : மன்னார்குடி அருகே சாலை விபத்தில் காயமடைந்து மூச்சு, பேச்சு இன்றி மயங்கிய கல்லூரி மாணவன் வசந்த்தை அவ்வழியாக சென்ற அரசு மருத்துவமனை செவிலியர் வனஜா, உடனடியாக CPR சிகிச்சை செய்து இதய துடிப்பை மீட்டு உயிரை காப்பாற்றினார். மேலும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மாணவர் வசந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துரிதமாக செயல்பட்டு மாணவர் இதய துடிப்பை மீட்ட செவிலியர் வனஜாவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Related Stories: