சென்னை: நடிகர் மகேஷ்பாபுவுக்கு மூட்டு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு கடந்த சில வருடமாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். அவர் சர்க்காரு வாரி பாட்டா தெலுங்கு படத்தில் ஆக்ஷன் காட்சியில் நடித்தபோது, மூட்டு வலி அதிகமானது. இதையடுத்து
டாக்டர்களின் அறிவுரைப்படி, அமெரிக்காவில் மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருக்கிறார். அதன் பிறகு அவர் இரண்டு மாதம் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.