திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது, `சமவாய்ப்பும், முழு பங்கேற்பும் எந்த ஒரு தடையுமின்றி அனைத்து மாற்றுத்திறனாளிகளும் நிறைவாய் பெற வேண்டும்’ என்றார். தொடர்ந்து இரண்டு காதுகேளாத மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தலா ரூ.3200 வீதம் ரூ.12800 மதிப்பிலான 4 காதொலி கருவிகளை விலையின்றி வழங்கினார்.