சென்னை: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: வேகமாக பரவும் ஒமிக்ரான் விழிப்புணர்வு மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து பள்ளிகளிலும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். 1-8ம் வகுப்பு வரை சுழற்சி முறையின் கீழ் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். நேரடி மற்றும் ஆன்லைன வகுப்புகள் நடத்தலாம். பள்ளிக்குள் மாணவர்கள் நுழையும் போது அனைவருக்கும் வெப்ப நிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.