பள்ளிகளில் இறைவணக்க கூட்டம் கலாச்சார நிகழ்ச்சி தவிர்க்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை:  பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: வேகமாக பரவும் ஒமிக்ரான் விழிப்புணர்வு மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து பள்ளிகளிலும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். 1-8ம் வகுப்பு வரை சுழற்சி முறையின் கீழ் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.  நேரடி மற்றும் ஆன்லைன வகுப்புகள் நடத்தலாம். பள்ளிக்குள் மாணவர்கள் நுழையும் போது அனைவருக்கும் வெப்ப நிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

ஆசிரியர்கள் முகக் கவசம் அணிந்து,  மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். மாணவர்களும் முகக் கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். பள்ளிகளில் நீச்சல் குளங்ககளை மூட வேண்டும். இறை வணக்கக் கூட்டம், விளையாட்டு நிகழ்வுகள், கலாச்சார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது.

Related Stories: