தமிழக அரசின் திட்டங்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களை சென்றடைய வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் உத்தரவு

சென்னை: அரசின் திட்டங்கள் முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களை சென்றடையும் வண்ணம் செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உத்தரவிட்டுள்ளார்.  தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக செயல்படுத்தப்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் மற்றும் தீனதயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்ய யோஜனா ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அனைத்து மாவட்ட திட்ட அலுவலர்களுடன் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது: முதலமைச்சர் மகளிர் சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்திற்காக ஆக்கப்பூர்வமான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இத்திட்டங்கள் முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களை சென்றடையும் வண்ணம் செயல்பட வேண்டும். பிற துறைகளுடன் ஒன்றிணைந்து செயல்பட்டு, அத்துறைகளின் மூலம் சுய உதவிக் குழுக்களுக்குத் தேவையான உதவிகளைப் பெற வேண்டும். அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு பொருளாதார வளர்ச்சி பெற வேண்டும். சிறு தொழிலில் ஈடுபட்டுள்ள சுய உதவிக் குழுக்கள், மேலும் ஊக்கத்துடன் செயல்பட்டு பெரிய அளவிலான தொழில்களை மேற்கொள்ளும் அளவிற்கு உயர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: