குடும்ப பிரச்னையில் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணை பலாத்காரம் செய்து 5 சவரன் தாலி செயின் அபேஸ்: வாலிபர் கைது

சென்னை: தஞ்சை மாவட்டம் பாப்பநாடு பகுதியை சேர்ந்த ராணி (37, பெயர் மாற்றப்பட்டுள்ளது), விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் அளித்த புகாரில், ‘எனது மகளுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று முன்தினம் எனது மகள், வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் உள்ள தாத்தா வீட்டிற்கு தனியாக வந்துள்ளார். அப்போது, தாத்தா வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் பூந்தமல்லி ஜெம்ஸ் ெதருவை சேர்ந்த முத்துராஜ் (24) என்பவருக்கு எனது மகள் போன் செய்துள்ளார். அவர், எனது மகளை கோயம்பேட்டில் இருந்து அழைத்து ெசன்று, சாலிகிராமத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்க வைத்து, ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர், எனது மகள் அணிந்திருந்த 5 சவரன் தாலி செயினை பாலிஷ் போட்டு தருவதாக வாங்கி சென்றுள்ளார்.

பின்னர், அந்த செயினை போன்று கவரிங் செயின் வாங்கி வந்து, மகளிடம் கொடுத்து கோயம்பேடு அழைத்து வந்து, பேருந்தில் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். வீட்டிற்கு வந்த மகளின் கழுத்தில் அணிந்து இருந்த செயின் வித்தியாசமாக இருந்ததால், இதுபற்றி கேட்டபோது, எனது மகள் நடந்த சம்பவத்தை கூறினார். எனவே எனது மகளை ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து, 5 சவரன் செயினை பறித்த முத்துராஜ் மீது நடவக்கை எடுக்க வேண்டும்,’ என்று கூறியிருந்தார். போலீசார், முத்துராஜை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் ராணியின் மகளுடன் உல்லாசமாக இருந்து 5 சவரன் செயினை அபேஸ் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து, முத்துராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனா பரிசோதனை செய்வதாக  மூதாட்டியிடம் 16 சவரன் பறிப்பு

எம்கேபி நகர் 14வது குறுக்கு தெருவை சேர்ந்த ஜெயலட்சுமி (68), நேற்று வீட்டில் இருந்து முல்லை நகர் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றபோது, முகக்கவசத்துடன் வந்த 2 பேர், ஜெயலட்சுமியை மறித்து, நாங்கள் மாநகராட்சி கொரோனா பரிசோதனை நிலையத்தில் இருந்து வருகிறோம். தற்போது அதிக அளவில் கொரோனா பரவி வருவதால், வீதி வீதியாக சென்று கொரோனா பரிசோதனை செய்கிறோம். உங்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் எனக்கூறி, அதே பகுதியில் தனியாக ஒரு இடத்திற்கு ஜெயலட்சுமியை அழைத்து சென்றனர். அங்கு, ‘நீங்கள் அணிந்துள்ள நகைகளை கழட்டி பையில் வைத்துக்கொள்ளுங்கள். பரிசோதனை முடிந்ததும் போட்டுக் கொள்ளலாம் எனக்கூறியுள்ளனர்.  அதன்படி, ஜெயலட்சுமி தனது 9 சவரன் செயின், 7 சவரன் வளையல் என மொத்தம் 16 சவரன் நகைகளை கழற்றி பையில் வைத்தபோது, அவருக்கு உதவி செய்வது போல் நடித்து, அவரது 16 சவரன் நகைகளை அபேஸ் செய்து, அங்கிங்கிருந்து தப்பினர்.

Related Stories: