சென்னை: வியாசர்பாடி மெகஷின்புரம் ஆறுமுகம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ஜான்சன் (45). சென்னை மாவட்ட கலெக்டரிடம் தபேதராக வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 30ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அதே பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து நேற்று முன்தினம் காலை வீடு திரும்பியபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.