சென்னை: சூளைமேடு பகுதியை சேர்ந்த ராஜம் (60), தனக்கு சொந்தமான வீட்டு மனையை விற்பனை செய்யும்படி கடந்த ஆண்டு முகப்பேரை சேர்ந்த தென்றல் ராஜாவிடம் (54) கூறியுள்ளார். அப்போது, அந்த நிலத்தின் ஆவண நகலை பெற்ற தென்றல் ராஜா, தனது கூட்டாளியான ஆவடியை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் சேர்ந்து, ராஜம் பெயரில் போலி பத்திரம் தயாரித்து, அந்த இடத்தை ராஜேஸ்வரி என்பவரிடம் விற்று, முதல் தவணையாக ₹15 லட்சத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவானார்.