பிரிட்டன்: லண்டனில் தமிழ் மொழியையும், கலைகளையும் கொண்டாட வழிவகை செய்யும் திட்டத்திற்கு மாநகர நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரிட்டனில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்னணி சுகாதார வல்லுநர்கள் என சுமார் 15,000 தமிழர்கள் பணிபுரிகின்றனர். இது தவிர ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஆசிரியர்களாகவும், ஆசிரியர் உதவியாளர்களாகவும் பிரிட்டன் பாடசாலைகளில் பணியாற்றுகின்றனர். இதன் மூலம் பிரிட்டனில் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் கட்டமைப்பிற்கு தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். இந்நிலையில், லண்டனில் வரும் தை மாதம் தமிழ் மரபுரிமை மாதமாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.