திருச்சி: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா பகுதியில் நேற்று முன்தினம் பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அரியலூர் மாவட்ட பாஜ தலைவர் ஐயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு ஐயப்பன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஒரு வாரத்திற்குள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்காவிட்டால், (மாநில தலைவர் கட்டளைப்படி) ‘தற்கொலை படை தாக்குதல் கூட நடத்த தயாராக’ இருக்கிறோம்’’என்றார்.