சென்னை: சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் வீட்டிற்குள் 10 அடி பள்ளம் ஏற்பட்ட நிலையில், அங்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். ஊரப்பாக்கம் ஜெகதீஸ் நகரில் சில தினங்களுக்கு முன்பு குடியிருப்பு பகுதியில் திடீரென்று 8 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது. நேற்று மற்றும் நேற்று முன்தினம் ஊரப்பாக்கம் வீட்டில் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் வண்டலூர் வட்டாட்சியர் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வீட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 7 குடும்பங்களும் வீடுகளை காலி செய்தனர். இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மற்றும் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியவர்கள் ஊரப்பாக்கம் ஜெகதீஸ் நகரில் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.