திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டம் திருவல்லா அருகே பெரிங்கரை பகுதியை சேர்ந்தவர் சந்தீப்குமார் (32). மார்க்சிஸ்ட் பெரிங்கரை வட்ட செயலாளர் ஆவார். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் சந்தீப்குமார் வெளியே சென்றுவிட்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். சாத்தங்கரிமுக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே 3 பைக்குகளில் வந்த 5 பேர் கும்பல் திடீரென சந்தீப்குமாரை வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியது.