கும்பகோணம் : கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே பராமரிப்பின்றி உள்ள பிடாரி குளத்தை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பிடாரி குளம் மிகவும் தொன்மை வாய்ந்த குளமாக விளங்குகிறது. இக்குளத்தை சுற்றி பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் மக்களுக்கு தேவையான பழம் மற்றும் காய்கறி கடைகள் உள்ளது. இருப்பினும் அப்பகுதியை சுற்றி குடியிருப்பவர்கள் குளத்தில் குப்பைகளை கொட்டி அசுத்தமாக காணப்படுகிறது.