சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான விருதுகளை வழங்கி பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சர் ஏ.வ.வேலு பங்கேற்றனர். அரசு மறுவாழ்வு இல்லத்துக்கு ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.