டெல்லி: தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், 3வதாக சைகோவ்-டி என்ற தடுப்பூசி விரைவில் அறிமுகமாகவுள்ளது. கொரோனா 3வது அலையை தடுக்க அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசி 2 கட்டங்களாக செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு ஏற்கனவே முதற்கட்ட தடுப்பூசி போட்டவர்களுக்கு 2வது கட்டமாகவும், தடுப்பூசி போடாதவர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 3வதாக சைகோவ்-டி என்ற பெயரில் தடுப்பூசி அறிமுகம் செய்யப்படவுள்ளது.