சென்னை: தமிழகத்தில் நேற்று 715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,01,818 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 715 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,28,350 ஆனது. நேற்று கொரோனாவில் இருந்து 748 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோரின் எண்ணிக்கை 26,83,691 ஆக உயர்ந்துள்ளது.