சென்னை: தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. நாள்தோறும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதேபோல், ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலையும் தடுத்து நிறுத்த தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், பல மாவட்டங்களில் கொரோனா இரண்டாம் அலையின்போது தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகங்கள் சார்பாக குறிப்பிட்ட தொகை செலவு செய்யப்பட்டது.