30 லட்சம் மோசடி வாலிபர் சிக்கினார்

சென்னை: திருவொற்றியூர் காலடிப்பேட்டை மல்லிகாபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (33) என்பவரிடம், அதே பகுதி ஜோதி நகரை சேர்ந்த அவரது நண்பர் சுந்தர் (28), வியாபாரம் செய்வதற்காக 30 லட்சம் கடன் பெற்று ஏமாற்றியுள்ளார். இதுபற்றி சதீஷ்குமார் திருவொற்றியூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, பெரும்பாக்கம் வரதராஜபுரம் பகுதியில் பதுங்கி இருந்த சுந்தரை நேற்று கைது செய்தனர்.

Related Stories: