சித்திரை மாதத்தையே தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாட வேண்டும்: ஓபிஎஸ் வேண்டுகோள்

சென்னை: சித்தரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற நடைமுறை தொடர்ந்திட முதல்வர் நடவடிக்கை எடுக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரியுள்ளார். இதுபற்றி அவர் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் பல நூற்றாண்டு காலமாக சித்திரை மாதப் பிறப்புதான் தமிழ்ப் புத்தாண்டு தினமாக தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டுகின்ற மரபு. இந்தநிலையில், 2022 பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனவே, முதல்வர், சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற நடைமுறை, மரபு, கலாச்சாரம் தொடரவும், பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் தமிழ்ப்புத்தாண்டு என்ற வாசகத்தை நிறுத்திட தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: