சென்னை: திருவான்மியூர், ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் விக்கி (எ) விக்னேஸ்வரன் (36). பிரபல ரவுடியான இவர்மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, அடிதடி, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், நேற்று காலை திருவான்மியூர் சிக்னல் அருகே உள்ள நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், விக்கியை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். இதில், அவரது தலை, கை, கால்கள் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.