பொன்னேரி: வடசென்னை அனல் மின்நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக, இன்று காலை 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தின் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட், 2வது நிலையின் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.