வடசென்னை அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

பொன்னேரி: வடசென்னை அனல் மின்நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக, இன்று காலை 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தின் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட், 2வது நிலையின் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று காலை 2வது நிலையின் முதல் அலகில் கொதிகலன் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதனால் அங்கு 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. கொதிகலன் கசிவை சீரமைக்கும் பணிகளில் அனல் மின்நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: