ஊட்டி: ஊட்டி தமிழகம் மாளிகை பூங்காவில் உள்ள புல் மைதானத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். அதேபோல், சிலர் தமிழகம் மாளிகை பூங்காவிற்கும் செல்கின்றனர். தற்போது, முதல் சீசனுக்காக அனைத்து பூங்காக்களையும் தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து பூங்காக்களிலும் விதைப்பு பணிகள் மற்றும் நாற்று உற்பத்தியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.