சென்னை: எம்.வி.கவரட்டி கப்பலில் உள்ள எஞ்சின் அறையில் தீடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்த உடனே 624 பயணிகள், 85 ஊழியர்கள் கப்பலில் பத்திரமான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். லட்சத்தீவு தலைநகர் கவரட்டியில் ஆந்த்ரோத் செல்லும்போது கப்பலில் தீ விபத்து ஏற்பட்டடதாக கடலோர காவல்படை தகவல் தெரிவித்துள்ளது.