கோவையில் 3 காட்டு யானைகள் இறந்த சம்பவத்தின் சுவடு மறைவதற்குள் அசாமில் 2 யானைகள் ரயில் மோதி உயிரிழப்பு!!

டிஸ்பூர் : கோவையில் ரயில் மோதி கருவுற்ற யானை உட்பட 3 காட்டு யானைகள் இறந்த சம்பவத்தின் சுவடு மறைவதற்குள் அசாமில் 2 யானைகள் ரயில் மோதி உயிரிழந்து இருப்பது பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமின் மோரிகான் மாவட்டம் ஜாகிரோடு அருகே இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 காட்டு யானையின் மீது அந்த வழியாக வேகமாக வந்த திப்ருகார் நகருக்குச் செல்லும் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது.

இதில் சில அடி தூரம் சென்று 2 யானைகளும் இழுத்துச் செல்லப்பட்டன. ஒரு யானை தண்டவாளத்திலேயே மரணம் அடைந்தது. மற்றொரு யானை பள்ளத்தில் விழுந்து மரணம் அடைந்தது.ஒரு யானையின் முறிந்த தந்ததை வனத்துறையினர் அகற்றி எடுத்தனர்.இறந்த 2 யானைகளையும் புல்டோசர் இயந்திரம் மூலம் தண்டவாளம் அருகிலேயே குழி தோண்டி வனத்துறையினர் புதைத்தனர்.

அப்போது ஏராளமான பொதுமக்கள் குழிக்குள் உப்பை தூவி தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.அசாமில் சுமார் 5000 காட்டு யானைகள் வாழ்ந்து வரும் நிலையில், ஆனால் காட்டு யானைகள் அடிக்கடி ரயிலில் மோதி இறப்பது வாடிக்கையாக உள்ளது. நாடு முழுவதும் யானைகள் தண்டவாளத்தை கடக்கும் மண்டலத்தில் ரயில்களின் வேகத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை மேலும் வலுக்க தொடங்கி உள்ளது. 

Related Stories: