×

மீண்டும் அதிகரித்த கொரோனா.. இந்தியாவில் ஒரே நாளில் 9,765 பேருக்கு தொற்று, 477 பேர் பலி : மத்திய சுகாதாரத்துறை!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.69 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.46 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 9,765 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,46,06,541 ஆக உயர்ந்தது.

* புதிதாக 477 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,69,724 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 8,548 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,40,37,054 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 99,763 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 98.35% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.36% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.29% ஆக குறைந்துள்ளது.

*இந்தியாவில் 1,24,96,19,515 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 80,35,261 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags : India ,Central Health Department , கொரோனா
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...