ரூ34,000 லஞ்சம் வாங்கிய வன அலுவலக உதவியாளர் கைது

தர்மபுரி: தர்மபுரி எஸ்வி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. வனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சின்னசாமியின் மறைவுக்கு பிறகு  அவரது மகள் சாந்தி குடும்ப பென்சன் பெற்று வருகிறார். இந்நிலையில், ஓய்வூதிய நிலுவைத்தொகையை  பெற சாந்தி தர்மபுரி சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்ட அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தார். நிலுவைத்தொகை பெற வன அலுவலர்கள் லஞ்சம் கேட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனை பெயரில் சாந்தியின் உறவினர் முருகன் ரசாயன பவுடர் தடவிய பணம் ரூ34,410 ஐ வன அலுவலகத்தில் இருந்த இளநிலை உதவியாளர் பழனிசாமியிடம் (52) கொடுத்தார். மறைந்திருந்த தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக அவரை பணத்துடன் பிடித்து கைது செய்தனர்.

Related Stories: