விழுப்புரம்: தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பிப்ரவரி மாதம் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின்பேரில், முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி 2 நாட்கள் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.