நடிகைக்கு கொலை மிரட்டல்

கொல்கத்தா: மேற்குவங்கத்தை சேர்ந்த பெங்காலி நடிகை அருணிமா கோஷ், லால்பஜார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், கர்பா பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கடந்த 2 ஆண்டுகளாக வாலிபர் ஒருவர் நடிகை அருணிமா கோஷை மிரட்டி வந்துள்ளார். கடந்த ஞாயிறு இரவு, குற்றம் சாட்டப்பட்ட அந்த வாலிபர் நடிகையின் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். அந்த வாலிபருக்கும், நடிகைக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரித்து வருகிறோம்.

மேலும், நடிகையின் செல்போனில் தொடர்புகொண்டு ஆபாச வார்த்தைகளால் திட்டுவது மட்டுமின்றி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதையடுத்து அந்த வாலிபர் மீது துன்புறுத்தல், அநாகரீகமாக நடந்துகொள்ளுதல், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வாலிபர் ஏற்கனவே 2 முறை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது 2வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்’ என்றார்.

Related Stories: