கொல்கத்தா: மேற்குவங்கத்தை சேர்ந்த பெங்காலி நடிகை அருணிமா கோஷ், லால்பஜார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், கர்பா பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கடந்த 2 ஆண்டுகளாக வாலிபர் ஒருவர் நடிகை அருணிமா கோஷை மிரட்டி வந்துள்ளார். கடந்த ஞாயிறு இரவு, குற்றம் சாட்டப்பட்ட அந்த வாலிபர் நடிகையின் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். அந்த வாலிபருக்கும், நடிகைக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரித்து வருகிறோம்.