திருவள்ளூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விதை உற்பத்தியாளர் பயிற்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விதை உற்பத்தியாளர் பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு முகமையின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விதை உற்பத்தியாளர் பயிற்சி முகாம், மகளிர் திட்ட மேலாளர் சந்திரசேகர் தலைமையில் ஈக்காட்டில் உள்ள திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. திருவள்ளூர் மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் நா.ஜீவராணி, திருவள்ளூர் மாவட்ட விதைச்சான்று அலுவலர் தி.டெ.அபிலாஷா ஆகியோர் கலந்துக் கொண்டு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விதை உற்பத்தியாளர் பயிற்சி அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது. தரமான விதையின் முக்கியத்துவத்தை பற்றியும், விதைப்பண்ணைகளில் பிற ரக கலவன்கள் நீக்கப்பட்டு இனத்தூய்மை பராமரிக்கப்பட வேண்டும். நெல், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்களை விதையாக உற்பத்தி செய்வதால் விவசாயிகளுக்கு இருமடங்கு வருவாய் கிடைக்கும்.மேலும் விதைப்பண்ணை அமைத்து பதிவு செய்து, தேர்ந்தெடுக்கப்படும் வயல் விதைச்சான்று அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்ய தகுந்த இடமாக இருக்க வேண்டும் என்றனர்.

Related Stories: