திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விதை உற்பத்தியாளர் பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு முகமையின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விதை உற்பத்தியாளர் பயிற்சி முகாம், மகளிர் திட்ட மேலாளர் சந்திரசேகர் தலைமையில் ஈக்காட்டில் உள்ள திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. திருவள்ளூர் மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் நா.ஜீவராணி, திருவள்ளூர் மாவட்ட விதைச்சான்று அலுவலர் தி.டெ.அபிலாஷா ஆகியோர் கலந்துக் கொண்டு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விதை உற்பத்தியாளர் பயிற்சி அளித்தார்.