சென்னை மெரினாவில் ரூ.35 கோடி மதிப்பில் அமைக்கப்படும் கலைஞர் நினைவிடத்திற்கான டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..!

சென்னை: சென்னை மெரினாவில் ரூ.35 கோடி மதிப்பில் அமைக்கப்படும் கலைஞர் நினைவிடத்திற்கான டெண்டர் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு சென்னை மெரீனாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விதி எண் 110இன் கீழ் இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதிக்கு புகழாரம் சூடிய ஸ்டாலின், கலைஞர் ஆற்றிய அரும்பணிகளை போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப்படங்களுடன் சென்னை, காமராஜர் சாலை, அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்றார்.

இந்த நிலையில், சென்னை மெரீனாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் கலைஞர் கருணாநிதி நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் கருணாநிதி நினைவிடம் அமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தற்போது, ரூ.35 கோடி மதிப்பில் அமைக்கப்படும் கலைஞர் நினைவிடத்திற்கான டெண்டர் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. வருகின்ற டிசம்பர் 28ம் தேதி வரை கலைஞர் நினைவிடத்துக்கான டெண்டர் கோரி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: