சென்னை: தென்னாப்பிரிக்கா, ஹாங்காங் ஆகிய ஆபத்து அதிகம் உள்ள 12 நாடுகளிலிருந்து வந்த 88 பேர், பிற நாடுகளிலிருந்து வந்த 50 பேர் என மொத்தம் 138 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் ஒமைக்ரான் கொரோனா தொற்று இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.