×

பயணத் தடைகள் மூலம் ஒமிக்ரான் பரவலை தடுத்துவிட முடியாது!: மக்களின் வாழ்வாதாரம் பெரும் சுமையாக மாறிவிடும் என WHO எச்சரிக்கை..!!

ஜெனிவா: பயணத் தடைகள் மூலம் ஒமிக்ரான் தொற்று பரவலை தடுத்து நிறுத்திவிட முடியாது என்றும், அத்தகைய தடைகளால் உலகளாவிய சுகாதார முயற்சிகள் மோசமாக பாதிக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உருமாறிய புதிய கொரோனா வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ம் தேதி கண்டறியப்பட்டிருப்பது உலகை உலுக்கி உள்ளது. இதற்கு காரணம் இதுவரை கண்டறியப்பட்டுள்ள உருமாறிய வைரஸ்களான ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா வைரஸ்களை விட இந்த புதிய உருமாறிய வைரஸ், அதிபயங்கரமானது, 50 முறை உருமாற்றம் கொண்டுள்ளது என மருத்துவ விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

தொடர்ந்து, ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளை சேர்ந்த மக்‍கள் தங்கள் நாடுகளுக்‍கு வருவதை தடுக்‍க, சில நாடுகள் பயணத் தடை விதித்துள்ளன. இந்நிலையில் ஒமிக்ரான் பாதிப்புள்ள தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரசில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட நாட்டு மக்‍களுக்‍கு பயணத் தடைகள் விதிப்பதன் மூலம் ஒமிக்ரான் தொற்று பரவலை தடுத்து நிறுத்திவிட முடியாது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

பயண  தடைகளால், மக்‍களின் வாழ்வாதாரம் பெரும் சுமையாக மாறிவிடும் என்றும் உலகளாவிய சுகாதார முயற்சிகளை மோசமாக பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் நோய் தொற்றுக்களை எதிர்த்து  போராட சர்வதேச உடன்படிக்கை அவசியம் என்றும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

Tags : Travel ban, Omigron, livelihood, WHO
× RELATED நீதிமன்ற முத்திரைத்தாளில் பிரமாணப்...