கொடைக்கானல்: கொடைக்கானலில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு மலைச்சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு துவங்கிய கனமழை நேற்று காலை வரை தொடர்ந்தது. சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், கொடைக்கானல் - அட்டுவம்பட்டி பிரிவு அருகே மலைச்சாலையின் குறுக்கே பெரிய மரம் விழுந்தது. இதேபோல் கொடைக்கானல் - பழநி மலைச்சாலையில் பெருமாள்மலையை அடுத்த ஆனைகிரிசோலை பகுதியில் ராட்சத மரம் விழுந்தது.