சென்னை: அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்ட நிலையில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த தமிழ்மகன் உசேனுக்கு அவை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதிமுக அவை தலைவராக இருந்த மதுசூதனன் மறைவுக்கு பிறகு அப்பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.