திருவனந்தபுரம் : கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காவிட்டால் இலவச மருத்துவ சிகிச்சை இல்லை என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போடாத ஆசிரியர்கள், பணியாளர்கள் ,பொதுமக்களை நேரில் சந்திக்கும் பணியில் இருப்பவர்கள் உள்ளிட்டோருக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது