டெல்லி : இந்தியாவில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் தொடர்ந்து 4வது காலாண்டாக உயர்ந்துள்ள நிலையில், நடப்பாண்டில் 2வது காலாண்டில் 8.4%உயர்வை கண்டுள்ளது. 2021-2022 நிதியாண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் ஜிடிபி எனப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 8.4%ஆக அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் 20.1 என்ற அபரிவிதிமான வளர்ச்சி இல்லாவிட்டாலும் தொடர்ந்து 4வது காலாண்டாக ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் வளர்ச்சி பாதையில் சென்று வருகிறது.