சென்னை: செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி சித்ரவதை செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மதுரையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் கடந்த 2011ம் ஆண்டு மர்மநபர்கள் சிலர் பசுவின் தலையை வீசி சென்றனர். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு தொடர்பாக தங்களை துணை போலீஸ் கமிஷனர் தலைமையிலான சிறப்புப்படையினர் கைது செய்து குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி சித்ரவதை செய்ததாக சாகுல் ஹமீது, அல்ஹஜ், ரபீக் ராஜா,ஷாயின்ஷா ஆகியோர் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்தனர்.